Wednesday, September 2, 2015

சேஷன்

ஆதிசேஷன் புஸ் புஸ்னு மூச்சு விட்டது ; திருமால் என்னப்பா சேதி ன்னார்

பெருமாளே, நானோ கருப்பு இருப்பதோ பாற்கடல் சுமப்பதோ சுடர்திருமேனிஆன   உம்மை
கருடன் இன்று வரும்போது கிண்டல் செய்கிறான் ஒளிரும் பாற்கடலின் திருஷ்டி போட்டு போல் நான் தெரிகிறேனாம்

சரி நான் கருடனை கண்டிக்கிறேன்

இல்லை இல்லை அவன் சொல்வதில் தவறிருப்பதாக தோன்றவில்லை - அதான் என் பேரிலேயே எச்சம் இருக்கிறதே சேஷன் என்று

ஓஹோ அப்படியா உன் பேரை மாற்றிவிடலாமா

மாத்தறதா இருந்தா "இல்லை திருவடி" ன்னு தான் மாத்தணும்

வேண்டுமானால் திருவாலன் என்று சொல்லவா

என் ஏந்தலே ! அடுத்த அவதாரத்தில் எனக்கும் ஒரு வேடம் வேண்டும் - அதுவும் வெள்ளையாக பிறக்கணும்

ராமனுஜராக இலக்குவனாக வாய்த்தது

பாற்கட ல் வந்தபிறகு மீண்டும்  புஸ் புஸ்னு மூச்சு விட்டது

இப்போ என்ன அரவனையே உலகமே போற்றும் உன்னத தம்பி நீதானே

இல்லை பெருமாளே ஒரே கோபிஷ்டன் உலகோடு ஒட்டவில்லை இன்னும் ஒரு முறை ப்ளீஸ் -இந்த முறை நான் அண்ணன், எனக்கு போர்குணம் அறவே கூடாது என்றது அரவம் 

பாலராமராக, பால் வண்ணனாக - கரும் கண்ணனின் அண்ணன்னாக பிறந்து உழவே தலை என்று ஊர்தோறும் உபதேசித்தது
ஒரு வம்புக்கும் போகாமல் ஒதுங்கி வாழ்ந்தது

யுக முடிவில் பாற்கடல் திரும்பியது
இம்முறையும் எதோ இடறியது

கண்ணா - யார் யாருக்கோ அருளுகிறாயே - என்னை பார்த்தால் பாவமாக தெரியவில்லையா

இன்னும் என்ன வேண்டும் சேஷா - என் ஒவ்வொரு அசைவும் நீமட்டுமே உணர முடியும் உனக்கு அருளவில்லை என்றால் என்ன -சொல்லு என்ன வேடம் வேண்டும்

நீ எதுவாக நினைக்கிறாயோ அதை கொடு இல்லை இல்லை எனக்கு ஒன்றும் வேண்டாம் நான் இனி இங்கேயே உன் திருவதன ஒளியிலேயே இருக்க சித்தம்


Wednesday, April 15, 2015

பகவான்

ரொம்ப நாளைக்கப்புறம் எதையாவது   எழுதலாம்னு  யோசிச்சப்போ சாமி, பகவான் தாள்களே என்ற முடிவுடன் ஆரம்பிக்கிறேன் 
இந்த பகவான் யாரு - இது தமிழ் சொல்லா? அப்பிடின்னு நினைக்கும்போது தமிழ் தாத்தாவின் தாத்தா வள்ளுவர் தொடங்கி பகவான் என்றும் ஆதி பகவன் என்றும் கூறுவது கொஞ்சம் மனதுக்கு சந்தோசமா இருந்தது 
சரி தலைப்பு ready, மிச்சம்?
பகவான் பகவான்னு சொல்றங்களே, அது அதிதியின் மைந்தன் "பக" அவரையா அல்லது முக்கண்ணன், நான்முகன் ஐம்படைமால் இதில் ஒருவரையா 
பாக்ய ஸூக்தம் மீண்டும் மீண்டும் பதினைந்து முறை கூறும் பக ஏவ பகவானஸ்து என்பதால் இன்று முதல் மிச்ச கடவுளர்களுக்கு மேல் பகவான் என்று இருப்பதாக வைத்து கொள்ளலாமா ?

இருக்கற கடவுள்களில் இன்னும் ஒன்னு கூட சேத்தா என்ன,   இதுதான் பெருசு, புதுசு ஆனா ரொம்ப பழசு அப்பிடின்னு சொல்லிடலாம்
என்ன ஒரு சௌகரியம் என்றால் தீபாவளி பொங்கல் அனைத்தும் இப்பவும் கொண்டாடலாம் - ஒரு பிரச்சனையும் இல்லை -

புதுசா ரெண்டு மூணு பண்டிகை சேத்து வரும், அதுக்கு ஆமை வடையா ஓட்டை உளுந்து வடையா என்று தெரியனும்.

இதே மாதிரி மத்தவருக்கும் இருந்து விட்டால் எவ்ளோ பிரச்சனை தீர்ந்துவிடும்  (வடை தவிர)