Wednesday, April 15, 2015

பகவான்

ரொம்ப நாளைக்கப்புறம் எதையாவது   எழுதலாம்னு  யோசிச்சப்போ சாமி, பகவான் தாள்களே என்ற முடிவுடன் ஆரம்பிக்கிறேன் 
இந்த பகவான் யாரு - இது தமிழ் சொல்லா? அப்பிடின்னு நினைக்கும்போது தமிழ் தாத்தாவின் தாத்தா வள்ளுவர் தொடங்கி பகவான் என்றும் ஆதி பகவன் என்றும் கூறுவது கொஞ்சம் மனதுக்கு சந்தோசமா இருந்தது 
சரி தலைப்பு ready, மிச்சம்?
பகவான் பகவான்னு சொல்றங்களே, அது அதிதியின் மைந்தன் "பக" அவரையா அல்லது முக்கண்ணன், நான்முகன் ஐம்படைமால் இதில் ஒருவரையா 
பாக்ய ஸூக்தம் மீண்டும் மீண்டும் பதினைந்து முறை கூறும் பக ஏவ பகவானஸ்து என்பதால் இன்று முதல் மிச்ச கடவுளர்களுக்கு மேல் பகவான் என்று இருப்பதாக வைத்து கொள்ளலாமா ?

இருக்கற கடவுள்களில் இன்னும் ஒன்னு கூட சேத்தா என்ன,   இதுதான் பெருசு, புதுசு ஆனா ரொம்ப பழசு அப்பிடின்னு சொல்லிடலாம்
என்ன ஒரு சௌகரியம் என்றால் தீபாவளி பொங்கல் அனைத்தும் இப்பவும் கொண்டாடலாம் - ஒரு பிரச்சனையும் இல்லை -

புதுசா ரெண்டு மூணு பண்டிகை சேத்து வரும், அதுக்கு ஆமை வடையா ஓட்டை உளுந்து வடையா என்று தெரியனும்.

இதே மாதிரி மத்தவருக்கும் இருந்து விட்டால் எவ்ளோ பிரச்சனை தீர்ந்துவிடும்  (வடை தவிர)