Wednesday, September 2, 2015

சேஷன்

ஆதிசேஷன் புஸ் புஸ்னு மூச்சு விட்டது ; திருமால் என்னப்பா சேதி ன்னார்

பெருமாளே, நானோ கருப்பு இருப்பதோ பாற்கடல் சுமப்பதோ சுடர்திருமேனிஆன   உம்மை
கருடன் இன்று வரும்போது கிண்டல் செய்கிறான் ஒளிரும் பாற்கடலின் திருஷ்டி போட்டு போல் நான் தெரிகிறேனாம்

சரி நான் கருடனை கண்டிக்கிறேன்

இல்லை இல்லை அவன் சொல்வதில் தவறிருப்பதாக தோன்றவில்லை - அதான் என் பேரிலேயே எச்சம் இருக்கிறதே சேஷன் என்று

ஓஹோ அப்படியா உன் பேரை மாற்றிவிடலாமா

மாத்தறதா இருந்தா "இல்லை திருவடி" ன்னு தான் மாத்தணும்

வேண்டுமானால் திருவாலன் என்று சொல்லவா

என் ஏந்தலே ! அடுத்த அவதாரத்தில் எனக்கும் ஒரு வேடம் வேண்டும் - அதுவும் வெள்ளையாக பிறக்கணும்

ராமனுஜராக இலக்குவனாக வாய்த்தது

பாற்கட ல் வந்தபிறகு மீண்டும்  புஸ் புஸ்னு மூச்சு விட்டது

இப்போ என்ன அரவனையே உலகமே போற்றும் உன்னத தம்பி நீதானே

இல்லை பெருமாளே ஒரே கோபிஷ்டன் உலகோடு ஒட்டவில்லை இன்னும் ஒரு முறை ப்ளீஸ் -இந்த முறை நான் அண்ணன், எனக்கு போர்குணம் அறவே கூடாது என்றது அரவம் 

பாலராமராக, பால் வண்ணனாக - கரும் கண்ணனின் அண்ணன்னாக பிறந்து உழவே தலை என்று ஊர்தோறும் உபதேசித்தது
ஒரு வம்புக்கும் போகாமல் ஒதுங்கி வாழ்ந்தது

யுக முடிவில் பாற்கடல் திரும்பியது
இம்முறையும் எதோ இடறியது

கண்ணா - யார் யாருக்கோ அருளுகிறாயே - என்னை பார்த்தால் பாவமாக தெரியவில்லையா

இன்னும் என்ன வேண்டும் சேஷா - என் ஒவ்வொரு அசைவும் நீமட்டுமே உணர முடியும் உனக்கு அருளவில்லை என்றால் என்ன -சொல்லு என்ன வேடம் வேண்டும்

நீ எதுவாக நினைக்கிறாயோ அதை கொடு இல்லை இல்லை எனக்கு ஒன்றும் வேண்டாம் நான் இனி இங்கேயே உன் திருவதன ஒளியிலேயே இருக்க சித்தம்