Sunday, May 24, 2009

Motherhood - தாய்மை

திருவானைக்காவலுக்கு அருகில் பிறந்ததாலோ என்னவோ எனக்கு - தாய், கடவுளை விட பெரிய வரமாய் தோன்றும்

மனதில் பதிந்த வரலாறு - திரு ஆனைக்கா வில் யானையும் சிலந்தியும் அடுத்த பிறவியில் அரசர்களாய் பிறந்தனவாம்

சிலந்தி தான் செங்கணான் - கோ செங்கணான் ஆக பிறந்தான் - அதனால்தான் அவன் கட்டிய எல்லா சிவ ஆலயங்களும் யானை ஏற இயலா வண்ணம் இருந்ததாம்

செங்கணான் தாய் - ராணி கமலவதி தில்லை ஈசனை அனுதினமும் மன்றாடி வேண்டி ஆண் மகவு ஈன்றாள் - ராஜா சுபதேவரின் அரண்மனை ஜோசியர் சொன்ன நேரம் மகன் பிறந்தால் உலகாளுவான், சைவ தொண்டு நிலைத்து நிற்க செய்வான் என்று இருப்பதால் - வலியெடுத்த கமலவதி - காலில் கயிறு கட்டி தலைகீழாக தொங்கினாள் -முகூர்த்த நேரம் வந்ததும் கீழ் இறக்கி வைத்து மறைந்தாள்.

அதே போல் கோச்செங்கனான் உலகாண்டான்

இதோ இக்கால தாயும் ஈனும் மகவுக்கு பிணி வராமல் காக்க என்ன என்ன துறக்கிறாள்

No comments: