Tuesday, July 27, 2010

கும்பகர்ணன்

சுமாலி அவன் நிலைக்கு மீறிய கனவு கண்டான் - சிறு வயதிலேயே பெரும் புகழும் வரமும் பெற்றதால் உலகின் பேராற்றல் வரும் திசை தெரிந்தவன் - எல்லாருக்கும் வரும் எண்ணம் அவனையும் தீண்டியது - நானே கடவுள் என் மக்கள் ... தன்னால் முடியாது, தேகம் தளருது என்றறிந்தவுடன் தக்க மகன் தேடலானான்

வீசமுனி புகழ் உலகறிந்தது ; குபேரன் தந்தை என்றால் சும்மாவா ; இளவிதை, தன கணவன் நோக்கு அறிந்து வீசமுனிக்கு உற்ற துணையாய் இருந்தாள்; மெல்ல மெல்ல செல்வமங்கை அவர்கள் வீட்டு சொத்து ஆனாள்; குபேரன் இலங்கையை வைகுந்தம் போல் செழிக்க வைத்தான்.

சுமாலி தன மகள் கைகசியிடம் உள்ளத்தில் உள்ள ஆசை அத்தனையும் சொல்வான் - பெற்றால் விஷ்ணுவை மகவாக பெற அந்த மனம் துடித்தது ; வீசமுனி தன மகன் என்ற பெயரில் அடுத்த விஷ்ணுவை உருவாக்கியது கண்டு அவனையே வரிக்க நினைத்தாள்

காலம் கூடியது - வீசை பெறா விஷயத்தில் இளாவிதை வீசமுனியை இழந்தாள்; கைகசி பெற்றாள்; மூன்று பெற்றாள்; ரஜஸ், தமஸ், சத்வம் என்று பெயரிட நினைத்தார் வீசை, ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்று பெயரிட்டனர்; பெண் பிறக்கா குடி பாழ் என்பதால் மீனாட்சி என்ற பெண் மகவும் பெற்றனர் - அவளே பிற்காலத்தில் சூர்பநகை ஆனாள்.

பங்காளி தகராறில் ராவணன் இலங்கையை எடுத்துகொண்டு அண்ணன் குபேரனை விரட்டினான் ;
மூன்று தமயர்களும் தம் பங்குக்கு வரம் வாங்க தவத்தில் ஈடுபட்டனர்
ராவணன் அழியா வரம் கேட்டான்
கும்பகர்ணன் பனிக்கரடி போல் தூங்கி விழிக்கும் உடல் மாறுபாடு கேட்டான் - பனிக்கால உறக்கம் மூலம் உடலில் உள்ள கொழுப்பு கரைய வழி கண்டான்
வீடணன் அழியா புகழ் மட்டும் போதும் என்றான்
உலகை காக்கும் பரம்பொருள் திடீரெண்டு முழித்தது ; அடடா, மனிதன் கொழுப்பு கரைய வழி கண்டால் உயிர் அழியாதே ; பிரம்மம் தவறு செய்து விட்டதே - இந்த வரம் உலகை நிலை குலைய வைக்குமே

திரு நினைக்க கரு உருவாக நார அயனன் மூலம் ராம அயனம் நடந்தது

பனிக்காலத்தில் போர் நடத்தி கும்பகர்ணன் உறக்கம் கலைத்து உயிர் கலைந்தது

ஹைபர்ணஷன் அன்று தடுக்கப்பட்டது - இன்று மீண்டும் விடை காண மனிதம் முயல்கிறது - மனம் இறங்குமா மகேசம்?
http://www.timesonline.co.uk/tol/news/science/article1845294.ece

No comments: