Saturday, June 13, 2009

ஒரு சந்தோஷம், ஒரு சந்தேகம்

முதலில் மகிழ்ச்சி --> விரல் போன்ற பதிவு எழுதிய நான் அனுப்பிய comment ஒருவர் பதிவாக மாற்றியுள்ளார் - பெரிய விழா எடுத்து கொண்டாட போகிறேன் - நன்றி கார்த்திக்

இதுவரை பதிவையோ பதிலையோ காணதவர் இங்கே சுட்டவும் / அமுக்கவும் / ஏதாவது செய்ஞ்சு உடனே பாருங்கோஓஒ

http://meekmetaphors.blogspot.com/

http://meekmetaphors.blogspot.com/2009/06/blog-post_03.html#comments

இப்போ சந்தேகம்

சுப்பிரமணிய புஜங்கம் படித்து கொண்டு இருந்தேன் - கிட்டத்தட்ட கடைசி வரும்போது எதற்காக ஆட்டுக்கு (chaga) நமஸ்காரம் என்று சங்கரர் சொல்கிறார் ? இந்த பதத்திற்கு வேறு ஏதாவது பொருள் இருக்குமோ ?

Nama kekine sakthaye chaapi thubhyam,
Nama chaga thubhyam, nama kukkudaya,
Nama sindhave sindhu desaya thubhyam,
Nama skanda murthe, punasthe namosthu

ஐயா யாரவது சற்று விளக்கம் சொன்னால் எனக்கு இருக்கும் சிறு அறிவுக்கூடு வெடிக்காமல் இருக்கும் - please அக்கம் பக்கம் கேட்டாவது சொல்லுங்களேன்
நன்றி

2 comments:

Anonymous said...

இங்கு நமச்சிந்தவே என்று ஆதிசங்கரர் வணங்குவது ஆட்டையேயன்றி இதற்கு வேறு பதம் இருப்பதாக தெரியவில்லை.காரணம்,ஆடு மாயாதத்துவத்தின் குறியீடாகவும் மயில் வேதத்தின் குறியீடாகவும்,சேவல் EGO வின் குறியீடாகவும் உணர்த்தப்படுகிறது.

கார்த்திக்

rudras prasadams said...

ஒரு சிறு திருத்தம்.
நம: சிந்தவே என்று அவர் வணங்குவது கடலை;
நம: சாகவே என்று வணங்குவது ஆட்டை.
கடல் ஆனந்தத்தின் குறியீடு.
மற்றபடி எல்லாம் சரியே.