Wednesday, March 3, 2010

ச்ச ரொம்ப வயசாயிடுச்சே

அட எனக்கும் அது நடந்து இருவத்தி அஞ்சு வருஷம் ஆயிடிச்சு
அதுதான் முதல் முறை - ஒரே முறை
சரியா சொல்லனும்னா எனக்கு இது நடக்கும்னு முடிவே பண்ணலே

அந்த வருஷம் மழை சுத்தமா பெய்யல

மார்ச் மூணாம் தேதி

விடியலா இல்ல பாதி ராத்திரியான்னே தெரியல - வந்து எழுப்பினாங்க - ஒரே லைட் வெளிச்சம்

பார்பர் வந்து சிரித்தான்
கல்யாண முடி எடுக்கணும் அப்பிடின்னான்
சரின்னேன் - என்ன பண்ணுவான்னு தெரியல

சொந்தம் பந்தம் அக்கம் பக்கம் எல்லாரும் வந்து வேடிக்கை பாத்தாங்க

இடம் பெரம்பலூர் பாட்டி வீடு -
கிணத்தடி கல்லில் உக்கார வைத்து ரெண்டு இழுப்பு - போய் குளிங்கன்னு சொல்லிட்டான் - கண்ணாடி காமிப்பான்னு நெனைச்சேன் - காமிக்கல

குளிச்சுட்டு வந்தா வேஷ்டி குடுத்தாங்க சுத்திகிட்டு வந்து உக்காந்தேன் - பட்டு போல - வழ வழ ன்னு இருந்துச்சு

எதிர்ல காந்தம் வீட்டுக்கு வர சொன்னார் அப்பா
குண்டு மாமா வந்து சொன்னார் - ஒரே புகை - தூக்கம் - ஒன்னும் புரியல
திடீர்னு வேஷ்டி போட்டு மூடினாங்க - தாத்தா வந்து காதிலே சொன்னார்
திருப்பி சொல்ல சொன்னார் - ஏற்கனவே தெரிஞ்ச விஷயம்தான் - சத்தமா சொன்னேன் - படு சுட்டி பலே !.. அப்பிடின்னு குண்டு சொன்னார்

எலை போட்டு பொங்கல் இட்லி எல்லாம் போட்டு எச்ச பண்ணாம சாப்பிட சொன்னங்க

பாத்திரத்துல இருந்த தண்ணிய எடுத்து சுத்த - நானும் சுத்தினேன்

மத்யானம் கல்யாண சாப்பாடு - சாப்பிடவுடன் தாம்பூல தட்டு அருகில் சென்று வெற்றிலை காம்பு சுண்ணாம்பு ரோஜா பாக்கு எல்லாம் எடுத்து மெல்ல ஆரம்பித்தது தான் தெரியும் - தூக்கம் கண்ணை சொருக வழிநடை திண்ணையில் தலைக்கு கை வைத்து படுத்துவிட்டேன் - சாயங்காலம் சித்தி வந்து எழுப்பி NTC கூட்டினுண்டு போனா - ரிஷப்ஷன் ஸ்வீட் காரம் ; சாப்பிட்டேன் - என்னடா முத நாளே டொக்கா? என்று சில பெருசுகள் கேட்டது - எது என்று தெரியாமலே - "நாளை முதல் நன்று" அப்பிடின்னு சொன்னேன் - என் தமிழ் வாத்தியார் சொன்னது

அவ்ளோதான் - என் பூணல் கல்யாணம் முடிஞ்சுடுச்சு

அக்கா கல்யாணம்தான் அன்னிக்கின்னு முடிவு - திடீர்னு அப்பாதான் ஏற்பாடு பண்ணினார்
ஒரே சமயத்தில ரெண்டு பேர்க்கும் எப்பிடின்னு யோசனையெல்லாம் பண்ணி பாத்து கடசில சரி இருந்துட்டு போகட்டும்னு சொல்லிட்டாங்க

அப்பா NLN உக்கும் ; எனக்கு தாத்தாவும் பூணல் போடுவார் என முடிவு செய்தனர்
கோத்ர விஷயங்களுக்கு ஸ்வாமிகள் முற்று புள்ளி வைத்தார்
"சங்கரனுக்கு இது நல்லதுதான் , பின்னால உதவும்"
நிஜம்மாவே பின் நாளில் பின்னால உதவியது தனி கதை

நினைச்சு பாக்கும்போது - ச்ச ரொம்ப வயசாயிடுச்சே


1 comment:

rudras prasadams said...

aaamaam... romba vayasaayidichche...