அதுதான் முதல் முறை - ஒரே முறை 
சரியா சொல்லனும்னா எனக்கு இது நடக்கும்னு முடிவே பண்ணலே 
அந்த வருஷம் மழை சுத்தமா பெய்யல 
மார்ச் மூணாம் தேதி 
விடியலா இல்ல பாதி ராத்திரியான்னே தெரியல - வந்து எழுப்பினாங்க - ஒரே லைட் வெளிச்சம் 
பார்பர் வந்து சிரித்தான் 
கல்யாண முடி எடுக்கணும் அப்பிடின்னான் 
சரின்னேன் - என்ன பண்ணுவான்னு தெரியல 
சொந்தம் பந்தம் அக்கம் பக்கம் எல்லாரும் வந்து வேடிக்கை பாத்தாங்க 
இடம் பெரம்பலூர் பாட்டி வீடு - 
கிணத்தடி கல்லில் உக்கார வைத்து ரெண்டு இழுப்பு - போய் குளிங்கன்னு சொல்லிட்டான் - கண்ணாடி காமிப்பான்னு நெனைச்சேன் - காமிக்கல 
குளிச்சுட்டு வந்தா வேஷ்டி குடுத்தாங்க சுத்திகிட்டு வந்து உக்காந்தேன் - பட்டு போல - வழ வழ ன்னு இருந்துச்சு 
எதிர்ல காந்தம் வீட்டுக்கு வர சொன்னார் அப்பா 
குண்டு மாமா வந்து சொன்னார் - ஒரே புகை - தூக்கம் - ஒன்னும் புரியல 
திடீர்னு வேஷ்டி போட்டு மூடினாங்க - தாத்தா வந்து காதிலே சொன்னார் 
திருப்பி சொல்ல சொன்னார் - ஏற்கனவே தெரிஞ்ச விஷயம்தான் - சத்தமா சொன்னேன் - படு சுட்டி பலே !.. அப்பிடின்னு குண்டு சொன்னார் 
எலை போட்டு பொங்கல் இட்லி எல்லாம் போட்டு எச்ச பண்ணாம சாப்பிட சொன்னங்க 
பாத்திரத்துல இருந்த தண்ணிய எடுத்து சுத்த - நானும் சுத்தினேன் 
மத்யானம் கல்யாண சாப்பாடு - சாப்பிடவுடன் தாம்பூல தட்டு அருகில் சென்று வெற்றிலை காம்பு சுண்ணாம்பு ரோஜா பாக்கு எல்லாம் எடுத்து மெல்ல ஆரம்பித்தது தான் தெரியும் - தூக்கம் கண்ணை சொருக வழிநடை திண்ணையில் தலைக்கு கை வைத்து படுத்துவிட்டேன் - சாயங்காலம் சித்தி வந்து எழுப்பி NTC கூட்டினுண்டு போனா - ரிஷப்ஷன் ஸ்வீட் காரம் ; சாப்பிட்டேன் - என்னடா முத நாளே டொக்கா? என்று சில பெருசுகள் கேட்டது - எது என்று தெரியாமலே - "நாளை முதல் நன்று" அப்பிடின்னு சொன்னேன் - என் தமிழ் வாத்தியார் சொன்னது 
அவ்ளோதான் - என் பூணல் கல்யாணம் முடிஞ்சுடுச்சு 
அக்கா கல்யாணம்தான் அன்னிக்கின்னு முடிவு - திடீர்னு அப்பாதான் ஏற்பாடு பண்ணினார் 
ஒரே சமயத்தில ரெண்டு பேர்க்கும் எப்பிடின்னு யோசனையெல்லாம் பண்ணி பாத்து கடசில சரி இருந்துட்டு போகட்டும்னு சொல்லிட்டாங்க 
அப்பா NLN உக்கும் ; எனக்கு தாத்தாவும் பூணல் போடுவார் என முடிவு செய்தனர் 
கோத்ர விஷயங்களுக்கு  ஸ்வாமிகள் முற்று புள்ளி வைத்தார் 
    "சங்கரனுக்கு இது நல்லதுதான் , பின்னால உதவும்"
நிஜம்மாவே பின் நாளில் பின்னால உதவியது தனி கதை 
நினைச்சு பாக்கும்போது - ச்ச ரொம்ப வயசாயிடுச்சே
 
1 comment:
aaamaam... romba vayasaayidichche...
Post a Comment