Sunday, March 7, 2010

டெல்லி ஜாபாலி.

என்ன பாலா ரொம்ப நாளா பதியவே இல்ல என்று வந்த மின்மடல் உசுப்பியதால் இந்த பதிவு


மின்மடல் அனுப்பியவர் - டெல்லி ஜாபாலி. அவர் இயற்பெயர் மறக்கும் அளவுக்கு இந்த ஜாபாலி ஒட்டிகொண்டது - இந்திய செல்லில் இருந்து வட அமெரிக்காவிற்கும் missed கால் விடமுடியும் - அதுவும் மாலை பொழுதின் மயக்கத்தில் அவர்களிடம் திரும்ப பேசும் அளவு மணித்துளிகள் இருக்கும் - கார் ஓட்டி கொண்டு வரும்போது வேறு வேலை இருக்காது - செல்லில் பேசுவது தடை செய்ய படவில்லை போன்ற விஷயங்களை அலசி வைத்து இருப்பவர்


என்னை விட 10 வயது பெரியவர். விதண்டாவாதத்தில் கரை கண்டவர்.


அவரை நான் சந்தித்தது நான் டெல்லி சென்ற புதிதில் . RK Puram முருகன் கோயிலில் தன்னை மறந்து கீச்சு குரலில் பிள்ளையாரை திட்டி கொண்டு இருந்தார் - அருகில் அவர் மனைவியும் மக்களும் ஆமோதித்த வண்ணம் இருந்தனர் - அவர் குறை list கிட்டத்தட்ட அருகில் உள்ள அனைவரையும் இழுத்தது - அங்கு வந்துள்ள பலர் வந்த நோக்கமே டின்னருக்கு பிரசாதம் வாங்குவது என்பதால் ஒரு கூட்டம் கூடி விட்டது - நானும் அதில் கலந்தேன்


"ஏண்டாஅப்பா, இங்க பார், இவங்க எல்லாரும் பாக்கறாங்க, உனக்கு கொஞ்சம் கூட வெக்கம் இல்ல? என் இப்பிடி பண்ற? நான் என்ன பெருசா கேட்டுப்பிட்டேன் - இன்னிக்கி குடும்பத்தோட வெளில சினிமா போனும் ஆபீஸ் வேலை அதிகம் வேக்காதேன்னுதானே சொன்னேன் - நீ என்ன பண்ணி வச்சு இருக்க - இன்னிக்கு கான்பெரென்ஸ் கால் - அதுவும் கிளைமாக்ஸ்ல - நிச்சயமா இந்த வேலை என்னால ஆகாது - என்னை பலி கிடா ஆக்கிட்ட ? எப்போ வருமோ தெரியாது - சரி அது போகட்டும் - போன வாரம் என்ன சொன்னேன் ? எங்க மாமா பையன் வந்து இருக்கான் - முதல் இன்டர்வியு - வேலை வாங்கி குடுக்கணுமா இல்லையா? நீ என்ன பண்றன்னே எனக்கு புரியல - இப்ப மாமா என்கிட்டே பேச மாட்டேனுட்டார் - நீயே போய் சமாதானம் பண்ணு - எனக்காக அவர் என்ன என்ன பண்ணி இருக்கார் தெரியுமா - in fact இந்த வேலையே அவர் போட்ட துதான் "


நான் படியேறி முருகனை பார்த்துவிட்டு கீழே இறங்கும் தருவாயில் அவர் இன்னும் நகரவில்லை - கும்பல் எல்லாம் பிரசாதம் வாங்க போய் விட்டது - அவர் கண்கள் கலங்கி இருந்தது - மொத்த குடும்பமும் விநாயகர் அகவல் சொல்லி கொண்டு இருந்தனர்


நான் அவரிடம் அருகில் சென்றேன் - "சார்" - திரும்பி பார்க்காமல் ஒரு தயிர் சாத டோக்கனை கொடுத்தார் - கண்மூடி இருந்தது -

"எனக்கு இது வேண்டாம் - நான் உங்கள்ட்ட பேசலாம்னு வந்தேன் - அங்க மண்டபத்தில் இருக்கேன் - நீங்க முடிச்சுட்டு வாங்க" என்றேன்

"ஒ அப்பிடியா - இதோ வர்றேன் - நம்ம கண்பத் எங்கியும் போக மாட்டன் - அப்பா வந்து முடிக்கறேன் - சாரோட பேசிட்டு வரேன் - என்ன சரியா"


நிஜமாகவே பிள்ளயார் தும்பிக்கை ஆடிய மாதிரி இருந்தது


"என்ன சார் ஊருக்கு புதுசா"


"ஆமாம்"


"அதான், தமிழ்ல பேசுன வுடனே வந்து விசாரிகிறீங்க - அவன் நல்லவந்தான் - என்ன இப்போ எங்கிட்ட எடக்கு பண்றான் - ஆனா எனக்கும் அவனை விட்டா யாரு இருக்கா "


அவன் பிள்ளையார் என்று கை சுட்டலில் இருந்து புரிந்தது


"என்னடா பித்து மாதிரி இருக்கேன்னு பாக்கறீங்களா - இங்க வீடு எல்லாம் வாங்கி இருக்கேன், குர்கான்ல இப்போ எங்க கம்பனி மாத்திட்டா - முன்ன மதுரா ரோட்ல இருந்தது"


"இவன ஒரு குழந்தயாயிருந்து பாக்கறேன் - அதான் பாசம் - இங்க பிரதிஷ்ட பண்ண எடுத்துண்டு வரப்போ சாயந்தரம், இவன என் கையில குடுத்து - இன்னிக்கி உன் கொழந்தையா நினைச்சு தாலாட்டு பாடுன்னு குடுத்தார் மகான் - எனக்கு கல்யாணம் ஆய் 2 வருஷம் இருக்கும் - என் பொண்ணு

பொறக்கல ... அன்னிலேந்து இவன்தான் எனக்கு புள்ள, அப்பா, சாமி எல்லாம் - நான் எப்பவும் இவன்கிட்ட சண்ட போட மாட்டேன் - இப்பதான் ரெண்டு மூணு வாரமா எல்லாம் எடக்கு மடக்க இருக்கு "


இன்னும் பேசியதில் அவர் நான் இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவில்தான் இருக்கிறார் என்று தெரிந்தது - நிறைய விஷய ஞானம் இருந்தது - எனக்கும் தமிழ் பேச ஒரு நல்ல மனுஷர் - அடுத்த நாளே என் வீட்டுக்கு வந்தார் - அந்த ஞாயிறு அவர் குடும்பத்துடன் வந்தார், அவரை அண்ணா என்று கூப்பிட வில்லை - ஆனால் மன்னி என்று முதல் பேச்சு ஆரம்பித்தவுடன் கூப்பிட்டேன் - மிக ஒடிசலான தேகம், பார்வையில் ஓர் கனிவு, எப்போதும் சிரித்த முகம் - என் மன்னி ஞாபகம் வந்தது - "குட்டி பொண்ணு" அவர்கள் ஒரே மகள் - துரு துரு .


அவரும் என் ஜாதி - அதாவது சாப்ட்வர் அஞ்சிநேயர் - எனக்கு தெரிந்த அனைத்து கணினி மொழிகளிலும் வேலை பார்த்து இருந்தார் - மிக பழைய பன்ச் கார்டெல்லாம் காண்பித்தார்


அவர் வேளையில் ஒரு சின்ன சிக்கல் - எல்லோருக்கும் கடவுச்சொல் வழங்க வேண்டும் - ஆனால் கொடுத்த ஆளை தவிர அடுத்தவர்களுக்கு தெரிய கூடாது - யாராலும் மாற்ற கூடாது -இதுதான் சாரம் - எனக்கு தெரியாத , புரியாத வார்த்தை எல்லாம் சரளமாக சொன்னார் - எதோ நான் அவருக்கு உதவுவேன் என்று

நானும் என்னால் முடிந்தவரை - தெரிந்த அனைவரிடம் இதை பற்றி பேசினேன் - யாரும் இதை சீர் தூக்க முடியல


மேலும் தொடரும் ...

No comments: