Wednesday, March 3, 2010

மண் தோன்றா காலத்து மனிதர்கள்

நான் - மிக பழைய தமிழக வாலிபன் - எனது கதையை கேளுங்கள்
"தோன்றிற் புகழோடு" ஒப்ப என் தோன்றலும் புகழ் சேர்த்த ஒன்று.
எனது கை விரல்களின் ஜாலம் என் பெற்றோர்களுக்கு வியப்பு அளிக்கவில்லை , ( ஏனெனில் என் தந்தை இதில் தேர்ந்தவர்) ஆனால் மகிழ்ச்சி அளித்தது உண்மை

நீரை நிலை நிறுத்தும் வீரன் என்று பெயர் பெற்றேன்

ஐந்து வயதில் ஆற்று போக்கை ஆறு போல் சுழித்தேன் - என் போறாத நேரம் - அந்த சுழியின் உள்ளே முனிவர் குடில் இருந்தது தெரியாமல் போனது - வெள்ளம் புகுந்ததும் வெளியேறிய அவர் - "நீ வந்த காரியம் இறை ஆதலால் அதை தடுக்க விரும்பவில்லை - ஆனால் உன் பெயர் சொல்லும் அளவுக்கு உன்னை வருங்காலம் நினைத்து பார்க்காது; உன் சுற்றமே உன்னை தூற்றும்; உன் குல பெயர் அவ பெயராக மாறும் "

நான் சிறுவன் என்று என் தந்தை சொன்னதும் , முனிவர் மனமிரங்கி - " சரி, பல்லாண்டு காலம் மக்கள் உன்னை மறந்தாலும், மீண்டும் உன் நினைவு அவர்களுக்கு வரும் - அதற்க்கு உன் செயலே காரணமாக அமையும் " என்று சொல்லி மறைந்து போனார்

என் தந்தை என்னை தென் கோடி அனுப்பினார் - படித்தேன், வளர்ந்தேன் ; வாட்ட சாட்டமான என் உரு நாடு பூராவும் தெரிந்த ஒன்று - தென்னாட்டில் உள்ள பல நீர் நிலைகள் என் கை பட்டே வளர்ந்தது - பசுமை என்னை பின் தொடர்ந்தது - என் கை படிந்த இடமெல்லாம் தோட்டம், மாடம் , மாளிகை - முச்சந்தி, நாற்ச்சந்தி, வளைவுகள் என்று கட்டட கலையில் வித்தகனாக்கியது - அரசனுக்கு அருகாமையில் அமர்த்தியது - அடுத்த நாட்டு அரசர்களெல்லாம் வந்து தலை வணங்கி எங்களிடம் இருந்து வித்தை கற்று அல்லது வித்தகர்களை அழைத்து சென்று அவர் நாட்டிற்கு நீர்வளம் நிலவளம் பெருக்கினர்.

என் தமயனை இங்கே சொல்லியே ஆக வேண்டும் - என்னை போல இடக்கு இல்லாமல் - தந்தை சொல் அப்படியே கேட்பவன் - அப்பாவும் அவனுக்கு ரகசியங்களும் விசித்திரங்களும் நிறைய சொல்லி கொடுத்தார் - அவர் பாத்திரம் அறிந்து இடுவதில் வல்லவர்

தமையன் தருக்கின்றி தளம் அமைப்பதில் வல்லவன்.
எங்கள் புகழால் எங்கள் குலத்துக்கே புது பெயர் கிடைத்தது - அதன் பொருள்கள் - நீர் குடிப்பவர் ; சூரியன் ;
"that which saves one from drowning "

ஒரு சமயம், உலகின் மிக சினந்த முனி எங்களிடம் வந்து கடலை பின்னிழுத்து நிலம் - அளம் அமைக்க சொன்னதும் செய்தோம்

ஆம் - நான்தான் நீளன்; என் தமையன் நளன் - எங்கள் குளம் கபி - மூத்த குடி மக்கள் நாங்கள் - திரை விடர்கள் - அதாவது கடல் கணவர்கள் அல்லது மூப்பின்றி இருப்பவர்கள்

எங்கள் விஞ்ஞானம் / அறிவியல் வாழ்வு - அனைவருக்கும் தெரிந்து இருந்தாலும், நாங்கள் கடலிலே கல்லை கொண்டு பாலம் அமைத்தாலும், உலகம் உண்டி தேடுமுன் நாங்கள் உயிர்வியல் உயரத்தில் இருந்தாலும் அந்த முனிகுமார சாபம் இன்னும் தீரவில்லை - எங்களவரே இன்னும் எங்களை புரிந்துகொள்ள வில்லை - புகழ வேண்டாம் please இகழாமல் இருங்களேன் !...

1 comment:

rudras prasadams said...

purindhum puriyaamalum irundhadhu enakku mudhal murai padiththavudan...
appuram thaan mella purindhathu... this is not a complaint... the format and style was so different and refreshing from your earlier posts...pleasant surprise... the subject is also like that...
you have given the treatment the subject deserves..

kalakkungal.